கொழும்பு - யாழ். இடையே மீண்டும் விமான சேவை
கொழும்பிலிருந்து (Colombo) - யாழ்ப்பாணம் (Jaffna) வரையான மக்கள் போக்குவரத்துக்கான விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
பலாலி சர்வதேச விமான நிலையம்
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து (Colombo International Airport Ratmalana) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை (Jaffna International Airport) வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
