ரணிலுக்காக களமிறங்கிய கொழும்பு மாநகரசபை பெண் உறுப்பினர் கைது
CID - Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe Arrested
By Sumithiran
சிறி ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை பெண் உறுப்பினரான ஹர்ஷனி சந்தருவானி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதித்துறையையும் நீதிமன்றத்தின் முடிவுகளையும் அவமதித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்படுவார்.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் தவறான செய்திகளைப் பரப்பியதாகவும் சந்தேக நபர் மீது பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
