மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு
பதுளை (Badulla) மற்றும் கொழும்பு (Colombo) கோட்டை இடையேயான தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று (29.06.2025) காலை தொடருந்து பாதையில் பெரிய பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை (28.06.2025) பதுளை மற்றும் ஹாலி எல பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து, இன்று காலை மண்மேடு ஒரு பகுதி இடிந்து தொடருந்து பாதையில் விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடருந்து போக்குவரத்து
இதன் காரணமாக, இன்று காலை 5:45 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே தொடருந்து (எண் 1016) ஹாலி எல தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் தொடருந்து (எண் 1045) தெமோதர தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தற்போது தொடருந்து ஊழியர்கள் பாதையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகளில் இன்று முழுவதும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
