விடுதலைப்புலிகளின் ஆபரணங்களை கையளிக்க விசேட திட்டம்! அரசாங்கம் உறுதி மொழி
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்களை விரைவில் உரியவர்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேக்கர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சி.சிறீதரனால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு இன்று(23.06.2026) பதில் வழங்கிய நிலையிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
3 ஆண்டுகள்
“வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எவ்வித ஆபரணங்களும் தமிழ் மக்களிடம் இருந்து இராணுவத்தால் பெறப்படவில்லை. எனினும் முகாம்களில் இருந்து பெறப்பட்ட ஆபரணங்களின் அளவு 150kg ஆகும்.

இந்த ஆபரணங்கள் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்து நீதிமன்ற தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களம், மத்திய வங்கி மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.
எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் இந்த ஒப்படைப்புக்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். 2014 ஆம் ஆண்டில் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட 2015 பேருக்கு இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மீண்டும் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எஞ்சிய ஆபரணங்கள் சட்ட ரீதியாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆபரணங்களின் உரிமையாளர்களின் விபரம் முழுமையாக இல்லாததால் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் இதனை வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |