பொதுமக்களுடனான மோதல்: காயமடைந்த காவல்துறையினர்: மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகம்!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்
காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை பலப்பிட்டிய அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்களில் குடிபோதையில் இருந்த சிலர் காவல்துறையினரை தாக்க முயற்சித்த போதே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும், அதன் போது இரண்டு காவல்துறையினர் காயமுற்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பொதுமக்களை கலைந்து போகச் செய்யும் வகையில் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்