துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : அநுர பிறப்பித்த அதிரடி உத்தரவு

Port of Colombo Anura Kumara Dissanayaka Bimal Rathnayake Sri Lanka Customs
By Sathangani Jan 13, 2025 06:03 AM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் நேற்று (12) இடம்பெற்றது.

இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் வேறு துறைமுகங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

எரிபொருள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

விசேட சோதனை நடவடிக்கைகள்

கடந்த சில நாட்களாக, ஒருகொடவத்த மற்றும் பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளின் இரு பக்கங்களிலும், கொள்கலன் தாங்கி ஊர்திகள் நீண்ட வரிசையில் தரிக்கப்பட்டுள்ளன.

கொள்கலன் பரிசோதனையில் சுங்கத் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசேட சோதனை நடவடிக்கைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : அநுர பிறப்பித்த அதிரடி உத்தரவு | Containers Stacked At The Colombo Port Anura Order

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக துறைமுக வளாகத்தில் பல கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கி கிடப்படதாக கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுங்கத்துறையிலிருந்து நாளாந்தம் ஆயிரத்து 800 கொள்கலன்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், தற்போது நாளாந்தம் சுமார் 700 கொள்கலன்கள் மாத்திரமே விடுவிக்கப்படுவதாகவும் கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணாக நாளாந்தம் சுமார் 600 கொள்கலன்கள் சுங்கச் சாவடிகளில் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு : தொடரும் காவல்துறை விசாரணை

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு : தொடரும் காவல்துறை விசாரணை

இரண்டு நாட்களாகக் குறைத்தல் 

சுங்கச் சோதனைகள் தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு பிரதான காரணம் என குறித்த கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : அநுர பிறப்பித்த அதிரடி உத்தரவு | Containers Stacked At The Colombo Port Anura Order

இதன்போது, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறையினர் விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களைக் கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்