அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் - இன் 44வது அலை தாக்குதல்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ நிலைகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து, ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4 இன் 44வது அலையைத் தொடங்குவதாக அறிவித்தது.
ஐ.ஆர்.ஜி.சி அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள கிரியாத் ஷ்மோனா, ஹடேரா மற்றும் ஹைஃபா உள்ளிட்ட பல இடங்களையும், அமெரிக்க ஐந்தாவது கடற்படை மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க இராணுவ தளங்களையும் குறிவைத்தது.
இந்தத் தாக்குதல்களில் துல்லியமாக வழிநடத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் சுற்றித் திரியும் தாக்குதல் ட்ரோன்கள் ஆகியவற்றின் கலவை அடங்குவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகளுக்கு ஒரு எச்சரிக்கை
இதில் அமெரிக்கப் படைகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. பிராந்தியம் முழுவதும் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி ஒரு எச்சரிக்கையை விடுத்து, உடனடியாக பின்வாங்குமாறு அழைப்பு விடுத்தது.

அமெரிக்க வீரர்களே, உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேறுங்கள், இல்லையெனில் நீங்கள் பிராந்தியத்தில் எங்கிருந்தாலும், ஹோட்டல்கள், சுரங்கப்பாதைகள், தொழில்துறை பகுதிகள் அல்லது நிலத்தடி தங்குமிடங்களில் இருந்தாலும், நாங்கள் உங்களை இடிபாடுகளுக்கு அடியில் புதைத்துவிடுவோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"அல்-குத்ஸின் விடுதலை மற்றும் அபகரிக்கும் சியோனிச அமைப்பை அகற்றுதல்" ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கை விவரித்துள்ளது.
வரவிருக்கும் சர்வதேச அல்-குத்ஸ் தினம் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் என்றும், "நாம் ஒரு வித்தியாசமான உலகளாவிய அல்-குத்ஸ் தினத்தைக் காண்போம். உலகின் சுதந்திரமான மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெற்றி எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது,” என்றும் அது மேலும் கூறியது.
43 ஆவது அலை - ஈரானின் பதிலடி
அமெரிக்கா - இஸ்ரேல் மோதலில் ஈரானின் Operation True Promise 4 என்ற பதிலடி நடவடிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.
இது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தொடங்கிய பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் தொடர்ச்சியாகும். தற்போது போர் 13வது நாளில் நுழைந்துள்ளது.
ஈரான் தரப்பில் IRGC தொடர்ந்து பல "அலைகள்" (waves) என அழைக்கப்படும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன் ஈரானால் 43 ஆவது அலை தாக்குதல் அறிவிக்கப்பட்டது.
இதில் டெல் அவிவ் மீது நேரடியாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. 43 ஆவது அலை குறித்த IRGCயின் அறிக்கயில் “இந்த சமீபத்திய அலை, பிராந்தியத்தில் உள்ள "அமெரிக்க பயங்கரவாத இராணுவம்" சார்ந்த தளங்கள், வடக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள டெல் அவிவ் மையப் பகுதிகள் மற்றும் ஈலாட் (Eilat) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது.

தாக்குதல்கள் இரண்டு தொன் போர் தலைகளுடன் கூடிய Khorramshahr ஏவுகணைகள், ஒரு தொன் போர் தலைகளுடன் கூடிய Qadr ஏவுகணைகள், ஒரு டன் போர் தலையுடன் கூடிய Emad மற்றும் Kheibar Shekan ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சுற்றித் தாக்கும் (loitering) தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. , "Operation True Promise" நடவடிக்கையின் 43வது அலை "Ya Shadid al-Eqab" ("ஓ கடுமையான தண்டனையாளரே" என்று பொருள்) என்ற குறியீட்டுப் பெயரின் கீழ் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இது தாரிக் அல்-குத்ஸ் (Tariq al-Quds) தியாகிகள், தேசிய சக்தியின் தியாகிகள் மற்றும் குறிப்பாக "Operation True Promise" நடவடிக்கைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹுசைன் சலாமி (Lieutenant General Hossein Salami) ஆகியோரை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது.
தாக்குதல்கள் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைத் தளம் (U.S. Navy’s Fifth Fleet base) மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க இராணுவ நிறுவனங்கள், டெல் அவிவ் மற்றும் ஈலாத்தில் உள்ள மூலோபாய இடங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, துல்லியமாக வழிநடத்தப்படும் கனரக ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.
இது தற்போதைய மோதலின் (மார்ச் 13, 2026 அன்று) தொடர்ச்சியாகும். IRGC தொடர்ந்து பல அலைகளை (waves) அறிவித்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, 43வது அலைக்குப் பிறகு 44வது அலையும் தொடங்கியுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |