வடக்கு கடற்பரப்பில் தொடரும் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறல்
அண்மைய புயல் காற்றிற்கு பின்னர் நேற்றிரவு அதிகளவான இந்திய இழுவைமடி படகுகள் வடமராட்சி கிழக்கு கடற்கரையில் காணப்பட்டதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கட்டைக்காடு முதல் காங்கேசன்துறை வரை கடலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வந்து வடக்கு கடற்றொழிலாளர்களின் வலைகளை வெட்டிவிட்டு செல்வதாகவும், சட்டவிரோத இழுவை மடி கடற்றொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு கட்டைக்காடு கடற்பரப்பில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய இழுவைமடி படகுகளுக்கும் இடையில் கடலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம்
கடற்றொழிலிற்கு சென்ற கடற்றொழிலாளர்கள் காணொளி ஒன்றின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.

அண்மைய நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்திற்கு பின்னர் இரண்டு நாட்களாக இந்திய இழுவைமடி படகுகள் வரவு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி - லின்றன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |