பெண் ஒருவர் வெளியிட்ட டிக்டொக் காணொளியால் சர்ச்சை! சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள இராணுவம்
தென்னிலங்கையில் பெண் ஒருவர் வெளியிட்ட டிக்டொக் காணொளி ஒன்றினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஆயுதப்படையினருக்கான ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு உரிமம் பெற்ற பல ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இருப்பதாகவும் அவை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதாகவும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் சீருடைகளை அணிய வேண்டும் என்றால் விசேட அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் சர்ச்சைக்குரிய காணொளி வெளியிட்டமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான டிக் டொக் காணொளிகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.