யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Court of Appeal of Sri Lanka
By Thulsi Feb 28, 2025 05:51 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ். (Jaffna) அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் (28.02.2025) இரண்டாவது தடவையாக நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார்.

தனிப்பட்ட புதைகுழி

குறித்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல் | Court Action Regarding Jaffna Chemmani Mass Grave

இது குறித்து முதற்கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அத்துடன் 2 அடி ஆழத்துக்கு கீழே தான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்படுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி

அந்தவகையில் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இது குறித்து தனது ஆய்வினை செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார்.


இவற்றை கருத்தில் கொண்ட நீதிவான், முதற்கட்டமாக ஸ்கான் மூலம் ஆய்வினை செய்வதாகவும், அந்தவகையில் 04.03.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் இடம்பெறும் எனவும், காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

செய்திகள் - கஜிந்தன்

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் (28.02.2025) யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

நாட்டில் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

நாட்டில் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

அதிகாரியின் அறிக்கைகள் 

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல் | Court Action Regarding Jaffna Chemmani Mass Grave

இதையடுத்து நீதிவான் குறித்த இடத்துக்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்தார்.

இதன்போது சட்ட மருத்துவ அதிகாரி தடயவியல் காவல்துறையினர், நல்லூர் பிரதேச செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் !

முகநூலில் ஏற்பட்ட நட்பு : யாழில் போலி தகவலை நம்பி இலட்ச கணக்கில் இழந்த நபர் !

அதிகாரியின் அறிக்கைகள்

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படுவதாக இருந்தது.

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல் | Court Action Regarding Jaffna Chemmani Mass Grave

எனினும் நீதிமன்றுக்கு நீதிவான் சமுகமளிக்காதமையால் வழக்கை விசாரித்த பதில் நீதிவான் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்திகள் - கஜிந்தன்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024