புதுக்குடியிருப்பு நகரில் கதவடைத்து திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி! (படங்கள்)
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழ் மக்களின் நின்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.
35 ஆம் ஆண்டு நினைவேந்தல்
இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.