தோனியின் இறுதிப்போட்டி - நுழைவுசீட்டு தொடர்பில் வெளியான தகவல்!
சென்னையைத் தவிர ஐபிஎல்லில் தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் நுழைவுசீட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் போட்டி தொடருக்கான நுழைவுசீட்டுகளும் விற்பனைகள் ஒவ்வொரு மைதானங்களிலும் தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
பெங்களூரிலும், மும்பையிலும் நுழைவுசீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் மட்டும் இன்றும் ஐபிஎல் பற்றுசீட்டு விற்பனை ஆரம்பமாகவில்லை.
காரணம், 3வது ஒருநாள் போட்டி நடந்து வருவதால் நுழைவுசீட்டு விற்பனை ஆரம்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 31ம் திகதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளன. இதற்காக 70 ஆயிரம் நுழைவுசீட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆனால், அறிவிப்பு வெளியாகிய நேரத்தில் ரசிகர்கள் நிகழ்நிலை மூலம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட நுழைவுசீட்டுகளை வாங்கி முடிந்ததாக கூறப்படுகிறது.
கடைசி ஐபிஎல்
அதேபோல், பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதும் ஆட்டத்திற்கான நுழைவுசீட்டுகள் அனைத்தும் வீற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் ஆட்டத்திற்கான நுழைவுசீட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. கொல்கத்தாவிலும் கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதும் ஆட்டத்திற்கான நுழைவுசீட்டுகளும் தீர்ந்து விட்டன.
சென்னை மட்டும் தான் தற்போது மீதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடர்தான் காரணம் என கூறப்படுகிறது.
