கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு
By Raghav
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகள் ஒரு சயனைடு (cyanide) குப்பியைக் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு சலிந்து"வின் உதவியாளரான "தரிந்து மதுசங்க" என்பவரிடம் இருந்து குறித்த சயனைடு குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சயனைடு குப்பி
"கமாண்டோ கவிஷ்க குமாரவைக் கொலை செய்வதற்காக இந்த சயனைடு குப்பி சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்ட சயனைடை, பரிசோதிப்பதற்காக அதனை கொண்டு வந்த குழு, ஒரு பல்லியைப் பிடித்து அதற்கு ஊசி மூலம் செலுத்தியதாகவும், பல்லி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்