கொலை செய்யப்பட்ட வர்த்தகர் : உறுதியானது வாஸ் குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கான மரண தண்டனை
முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன (Vass Gunawardena) மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன (Ravindu Gunawardena) உள்ளிட்ட அறுவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி (Bambalapitiya) பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் (Mohammed Shyam) என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
மரண தண்டனை
வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், நீண்ட பரிசீலனைக்கு பிறகு உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப காவல்துறை பரிசோதகரும் மற்றும் மூன்று காவல்துறை உத்தியோகஸ்தர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
