முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!
2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இவ்விடயத்தை முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
முறைப்பாடு
இவ்விடயம் தொடர்பாக மிகவும் இரகசியமான முறையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் முறைப்பாடுஅளித்ததாகவும், எனினும், விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்த தன்னிடம் பணம் இல்லை என பகிரங்கமாக கூறினார், அரசாங்க அதிகாரிகள் குழுவும் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தது.
குறிப்பாக, அப்போதைய அரசாங்க அச்சு அலுவலகத்தின் தலைவரான கங்கானி கல்பானி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட ஒன்றரை பில்லியன் ரூபாய் செலவிட்ட போதிலும் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்புடைய வாக்குச் சீட்டுகளை வழங்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |