இந்தியத் தலைநகரில் வரலாறு காணாத மழைபொழிவு - 50 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
இந்தியத் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான மழைபொழிவு வார இறுதியில் பதிவாகியுள்ளது.
மழை வெள்ளம் மின்னல் தாக்குதல் மற்றும் நிலச்சரிவுகளால் வட இந்திய மாநிலங்களில் இதுவரை 50க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவில் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவற்றில் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைளின் பின்னணியில் கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை அதன் 75 மாவட்டங்களில் 68 மாவட்டங்களில் கடுமழை பெய்துள்ள நிலையில் அங்கு 34 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் 17 பேர் மின்னல் தாக்குதலில் பலியாக ஏனையோர் மழை நீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நேற்று 153 மில்லிமீற்றர் அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
1982 ஆம் ஆண்டுக்குப் பின்

இது 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நகரத்தில் ஒரேநாளில் பெய்த அதிகளவு மழையாகவும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய வட மாநிலங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கைகள் வெளியிட்டப்பட்டதுடன் பொதுமக்கள் தங்களின் நடமாட்டங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன.
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை, பியாஸ் ஆற்றின் அருகே வெள்ளத்தில் மூழ்கிய விடுதியொன்றில் இருந்து 27 பேர் மீட்கப்பட்டனர்.
பருவ மழைக்குரிய காலப்பகுதி

கடும் காரணமாக உத்தரபிரதேசம், புது தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை வழமையாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாக காலப்பகுதி பருவமழைக்குரிய காலப்பகுதியாகும்.
இந்தமுறை கடுமையான கோடைகாலத்தின் வெப்ப அலைகளால் நாடு பாதிப்படைந்த நிலையில் கடந்த மாதம், வடகிழக்கு இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்