30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை

Anura Kumara Dissanayaka Independence Day Sri Lanka
By Harrish Jan 29, 2025 11:48 AM GMT
Report

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான தனது சகோதரனை விடுவிக்குமாறு சகோதரி ஒருவர் ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினியே ஜனாதிபதி அநுரவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “எங்களுடைய சகோதரனுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

தற்போதய ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவருக்கும் கடிதம் கொடுத்துள்ளேன். அதற்கான பதில் எனக்கு கடிதம் கிடைத்தது என்று மாத்திரமே வந்தது.

ஜனாதிபதி அநுர எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் வருகை தரும் தினமான 31ஆம் திகதியுடன் எனது சகோதரன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. 

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சகோதரனுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை. இந்த முறை சுதந்திர தினத்திலாவது அவரை விடுதலைசெய்து எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.

நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம். நீங்களாவது என்னுடைய சகோதரனுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

30 ஆண்டுகள் சிறை

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த எங்களுடைய சகோதரனுக்கு தற்போது 50 வயதாக போன்றது.

இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.

எங்களுடைய சகோதரன் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

நான் இறுதியாக ஜனாதிபதி அநுரவின கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம். 

நீங்கள் கூறியதை நிறைவேற்றுவீர்கள் என நாங்கள் உங்களை நம்பியிருக்கின்றோம். 

கடந்த காலங்களில் வந்த ஜனாதிபதிகள் எவரும் நமக்கான நீதியைப் பெற்றுத்தரவில்லை. 

நீங்கள் இந்த சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பளித்து எங்களுடைய சகோதரனுக்கு சுதந்திரத்தினை கொடுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்