நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டகாசம்...! அடித்து நொறுக்கப்பட்ட வீடு
யாழில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்றைய தினம் (28-06-2026) சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்றுவிட்டு அதனை அடைப்பதற்கு வாங்கிய பணத்தின் பல மடங்கு பணமானது செலுத்தப்பட்டும் கடன் தீரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வட்டிக்கு பணத்தினை பெற்றவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வன்முறை கும்பலால் பணத்தினை பெற்றவரது வீடு மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 12 மணி நேரம் முன்