இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் யோசி கராடி (Yossi Karadi) இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிகவும் திறமை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இஸ்ரேலுக்கு எதிரான பகைமைமிக்க இணையவழிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 2025 ஜூன் மாதத்தில் சுமார் 1,600 ஆக இருந்த நிலையில் 2026 ஜூன் மாதத்தில் அது தோராயமாக 4,800 ஆக உயர்ந்துள்ளது.

சில ஹேக்கர் குழுக்கள் மிகவும் திறமையானவை எங்களால் அவர்களைக் கையாள முடியும் ஆனால் நாம் அவர்களை அலட்சியப்படுத்தாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமான போர்க்களத்தைப் போலல்லாமல் சைபர் தளத்தில் எந்தவொரு போர்நிறுத்தமும் கிடையாது.
கணினி அமைப்புகள்
இந்த சைபர் தாக்குதல்கள் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள் போன்ற சிறிய வணிகங்களை இலக்கு வைத்துள்ளன.
எளிதாக ஊடுருவக்கூடிய நிறுவனங்களின் கணினி அமைப்புகளில் உள்ள தரவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் உடனடியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், பிற நாடுகளுக்கு எதிராக தாங்கள் எவ்வித ஹேக்கிங் தாக்குதல்களையும் நடத்தவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வரும் டெஹ்ரான் (Tehran), தங்களது சைபர் உள்கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 10 மணி நேரம் முன்