காசா மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Colombo
Gaza
By pavan
பலஸ்தீன - காசா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்தக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) தாமரை தடாகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான முஸ்லிம் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் குடிசார் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அப்பாவி குழந்தைகளை விடுவி
மனிதாபிமானம் எங்கே.. பலஸ்தீனில் உள்ள அப்பாவி குழந்தைகளை விடுவி.. காசாவிற்கு உதவிகளை வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதேவேளை, கொட்டும் மழையில் இடம்பெற்றுவரும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல சிறுவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 59 நிமிடங்கள் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி