அதிரப்போகும் போர்க்களம் - உக்ரைன் வானில் பறக்கவுள்ள எப் 16 போர் விமானங்கள்
நெதர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, F-16 போர் விமானங்கள் "உக்ரைனிய வான்பரப்பில் பறப்பில் ஈடுபடும்" என்று அறிவித்துள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நெதர்லாந்திடமிருந்து

செய்தியாளர் சந்திப்பின் போது, நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டோ, நெதர்லாந்தில் 42 F-16 போர் விமானங்கள் உள்ளன என்றும், அவற்றில் எத்தனை உக்ரைனுக்கு மாற்றப்படும் என்பது பற்றி பேசுவதற்கு இன்னும் தாமதமாகவில்லை என்றும் கூறினார்.
முதலில் உக்ரைனிய விமானிகள் டென்மார்க் மற்றும் ருமேனியாவில் பயிற்சியை முடிக்க வேண்டும் என்று ருட்டோ விளக்கினார். விமானிகள் தற்போது ஆங்கிலம் கற்று வருகின்றனர் [விமானத்தை இயக்கவும் மேலும் பயிற்சியை முடிக்கவும்]. இராணுவப் பயிற்சி இன்னும் தொடங்கவில்லை அது ருமேனியாவில் நடைபெறும்.
போர் விமானங்களை பார்க்கும் காணொளி
F-16 விமானங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை உக்ரைன் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் டச்சு பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஜெலென்ஸ்கி நெதர்லாந்தில் உள்ள இராணுவ தளத்தை சுற்றி நடந்து போர் விமானங்களை பார்க்கும் காணொளி இணையத்தில் வெளியானது.
டென்மார்க் அரசும் தயார்

இதேவேளை 19 F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க டென்மார்க் முடிவு செய்துள்ளது