வவுனியாவில் பல இடங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் சோதனை!
Vavuniya
Sri Lanka
Inland Revenue Department
By Shalini Balachandran
வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றைய தினம் (23-06-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு பூராகவும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளைச் சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர்.
சோதனை நடவடிக்கைகள்
இதனடிப்படையில் வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வவுனியாவில் நகைக் கடைகள், ஹாட்வெயார்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவை மீது திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்