ஃபௌஸிக்கு எதிரான அடிப்படை உரிமை மனு! உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை முன்னாள் அமைச்சர் A. H. M. பௌஷி தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை பின்னர் வழங்குவதற்காக ஒத்திவைத்ததுடன், தீர்ப்பு வழங்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த மனு, தலைமை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவப் பணி
இம்மனுவை, சந்திர ஜெயரத்னே தாக்கல் செய்திருந்தார்.

அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக வழங்கப்பட்ட அரச வாகனம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |