உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jun 23, 2026 09:26 AM GMT
Report

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக சுமார் இரண்டு ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முகம்மது ஃபஸல், சிறப்பு நேர்காணல ஒன்றில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை எனக் கூறப்படும் Research and Analysis Wing (RAW) அமைப்பினால் திட்டமிடப்பட்டதல்ல என்றும் மாறாக அது அமெரிக்காவின் ஒரு திட்டமாக இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் உடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக “அபூஹின்” என்ற போலி நபர் உருவாக்கப்பட்டதாகவும், அந்த நபர் முதலில் சஹ்ரானின் சகோதரர் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் சஹ்ரானை தாக்குதலுக்குத் தூண்டியதாகவும் ஃபஸல் தெரிவித்துள்ளார்.

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

சஹ்ரான் தலைமையிலான குழு

மேலும், சஹ்ரான் தலைமையிலான குழுவின் ஆரம்பகட்டத் திட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்காகக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு | Easter Attack Investigation New Symposium Arisen

அவர்களின் முதன்மை இலக்கு பொசோன் அல்லது வேறு ஒரு பௌர்ணமி தினத்தில் நடைபெறும் பெளத்த பேரணியைத் தாக்குவதாக இருந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் பெரும் அமைதியின்மையை உருவாக்குவதே நோக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏப்ரல் 14 ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு விழாவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அப்போது வெடிபொருட்கள் முழுமையாக தயார் ஆகாத காரணத்தால் அந்தத் திட்டம் மாற்றப்பட்டதாகவும் ஃபஸல் கூறியுள்ளார்.

வெடிபொருட்களை விரைவாக உலர்த்துவதற்காக சஹ்ரானின் குழுவினர் ஒரு துவைப்பொறியையும் (Washing Machine) வாங்கியிருந்ததாகவும், தாக்குதலுக்கு முன்னர் குண்டுகள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் அந்தத் துவைப்பொறியும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் இறுதி நோக்கம் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் தலைவரை ஆட்சிக்கு கொண்டு வருவதாக இருந்ததாகவும் ஃபஸல் குற்றஞ்சாட்டினார்.

உலகுக்கு எச்சரிக்கை மணி - வெப்ப அலையில் தகிர்க்கும் ஐரோப்பா: பாடசாலைகளுக்கு பூட்டு

உலகுக்கு எச்சரிக்கை மணி - வெப்ப அலையில் தகிர்க்கும் ஐரோப்பா: பாடசாலைகளுக்கு பூட்டு

கோட்டாபய ராஜபக்ச 

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வருவதற்கான சூழல் இந்தத் தாக்குதலின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், அவரது அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தமை தொடர்பான ஆவணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு | Easter Attack Investigation New Symposium Arisen

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக தற்போது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள 24 பிரதான சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்கான சட்டச் செலவுகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்து வருவதாகவும் ஃபஸல் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறிய ஃபஸல், உண்மையான திட்டமிடுபவர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றும், தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் எந்த இடத்திலும் விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட தகவல்கள் முகம்மது ஃபஸல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இக்கூற்றுகள் தொடர்பாக நீதிமன்றம் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் அல்ல.

குறி வைக்கப்பட்ட சலே..! ராஜபக்சக்களை பழி வாங்க திட்டம் - கதறும் சாகர

குறி வைக்கப்பட்ட சலே..! ராஜபக்சக்களை பழி வாங்க திட்டம் - கதறும் சாகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025