மகிந்தவின் பதவியேற்பில் இடம்பெற்ற முறைகேடு! விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (22.06.2026) இந்த வழகாகனது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலதிக விசாரணை
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவையொட்டி, 11 பத்திரிகைகளில் சிறப்பு இதழ்களை வெளியிடுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்குப் பத்து இலட்சம் எழுநூற்று நாற்பத்தெட்டு ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தேழு மற்றும் எழுபத்தாறு ரூபாய் (ரூ. 1,748,877.76) இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் இழைத்துள்ளதாக இலஞ்ச ஆணையம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |