தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (deshabandu tennakoon) ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.03.2025) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று (20) உத்தரவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.03.2025) முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்