காவல்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் புதிய முடிவு!
அடுத்த காவல் துறை மா அதிபர் பதவிக்கான நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்தப்பதவிக்கு சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நியமனம் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சரான திரான் அலஸ் ஆகியோரும் கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் பதவியில் நீண்ட காலமாக பணியாற்றிய சி.டி.விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு புதிய காவல்துறை மா அதிபரை நியமிப்பதில் பல்வேறு பிணக்குகள் அண்மைக்காலத்தில் அரங்கேறியிருந்தன.
கருத்து வேறுபாடுகள்
முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் அதிபரிற்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக காவல்துறை மா அதிபர் நியமனம் தாமதமானதாகவும் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவருக்கே நியமன அதிகாரம் உண்டு, அதன்படி அதிபர் நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
இந்த அரசிலமைப்பு சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், இதில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்