தெவிநுவர இரட்டை படுகொலைச் சம்பவம் : சிக்கிய மற்றுமொரு சந்தேக நபர்
தெவிநுவரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொர நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, தெவிநுவரவில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் வானுக்கு தீ வைத்ததில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிதாரிகள்
தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சிங்காசன வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு 11:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
வானில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிளை மோதி பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதாள உலகக் குழு
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பசிந்து தாரகா (29) மற்றும் யோமேஷ் நடீஷன் என அடையாளம் காணப்பட்ட இருவருக்கும், “பலே மல்லி” என்று அழைக்கப்படும் குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள பிரதான சந்தேக நபர், துபாயில் பதுங்கியிருப்பதாகவும், பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஷெஹான் சத்சர என்றும் அவர் "பலே மல்லி" என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாத்தறை பிரிவு குற்றப்பிரிவு, கந்தர காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
