பந்தை சேதப்படுத்தினார்களா சென்னை அணி வீரர்கள்..!(வைரலாகும் காணொளி)
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை காணொளி வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சர்ச்சை காணொளி
இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர்களான அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
Ball Tempering 😅
— Rajat Yadav (@rajatyadav_26) March 24, 2025
CSK is a Always fixer team 😅#CSK #CSKvsMI #IPL #IPL2025 #TATAIPL2025 #TATAIPL #balltempering #Dhoni #dhobi @ChennaiIPL @RCBTweets @IPL @StarSportsIndia @JioHotstar @IrfanPathan pic.twitter.com/2Yp5EQbSIA
அந்த காணொளியில், கலீல் அகமது பந்து வீச தயாராகும் முன் தனது பொக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து ருதுராஜ் கையில் கொடுப்பது போலவும், அதனை கெய்க்வாட் தனது பொக்கெட்டில் மறைத்து வைப்பது போலவும் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பி.சி.சி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
இருப்பினும் அது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை. இதனை வைத்து சில ரசிகர்கள் சென்னை அணியினர் பந்தை சேதப்படுத்தியுள்ளனர் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் இது குறித்து பி.சி.சி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
