புதிய மாற்றங்களுடன் இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் முக்கிய சேவை!
தொடருந்து ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அதில் உள்ள மோசடிகளையும், ஊழலையும் தடுத்து நிறுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய மாற்றங்கள்
கட்டண திருத்தம் வாய்மொழி மூலமான பதில்களை எதிர்பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
பேருந்து கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்த தொடருந்து கட்டணத்தை பேணுவது தொடர்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கான முடிவுகளை எடுப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தொடருந்து திணைக்களத்தை திறன்மிக்கதாக நடத்துவதற்கு திணைக்கள முறைக்கு அப்பாற்பட்டு அதிகார சபையாக மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
