திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம் நோக்கி பயணம்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Vavuniya
Mullivaikal Remembrance Day
By Shadhu Shanker
தியாக தீப திலீபனின் நினைவு ஊர்தி வவுனியாவில் (Vavuniya ) நேற்றையதினம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து வவுனியாவிலிருந்து புறப்பட்டு ஏ9 வீதி ஊடாக மாங்குளம் வந்தடைந்து மாங்குளத்தில் இருந்து மல்லாவி சென்று மீண்டும் மாங்குளம் வந்தடைந்து ஏ9 வீதி ஊடாக நேற்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.
நினைவு ஊர்தி
இந்நிலையில், கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் மீண்டும் மாங்குளம் ஊடாக இன்றையதினம் 25.09.2024 கிளிநொச்சி வந்தடைந்து தியாகி திலீபனின் நினைவு ஊர்தி கனகாபுரம் மாவீரர் துயிலும் இல்லம் செல்லவுள்ளது.
இதனை தொடர்ந்து, அங்கு அஞ்சலி நடைபெற்ற பின்னர் பொது சந்தையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளது.
அதன் பின்னர் நினைவு ஊர்தி யாழ்ப்பாணம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |