அரச அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள கடும் உத்தரவு..!
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Kiruththikan
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
அரசின் வரவு மற்றும் செலவு மதிப்பீட்டை விட குறைவாக இருப்பதால், அரசு செலவினங்களை குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவிற்கு அதிபர் அறிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜனவரியில் அரச வருமானச் செலவு மதிப்பீட்டை விடக் குறைவாக இருந்ததால் அரச செலவினங்களைக் குறைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானம்
அரசாங்கத்தின் வருமானம் அனைத்து செலவுகளுக்கும் போதாது எனவும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் சேவைகளை மட்டுமே ஈடுசெய்ய முடியும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.