மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது ஏன்..! அமைச்சர் கூறும் புது விளக்கம்
Colombo
Galle Face Protest
Bandula Gunawardane
By Sumithiran
கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக கல்வியாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த போராட்டம் காரணமாக இந்த நாட்டில் நம்பிக்கை அதிகம் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபரை வெளியேற்றி குடிமக்களின் வீடுகளை எரித்தால்

அதிபரை வெளியேற்றி குடிமக்களின் வீடுகளை எரித்தால் தமது பிள்ளைகளின் கதி என்னவாகும் என தொழில் வல்லுநர்களும் புத்திஜீவிகளும் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் அச்சமோ சந்தேகமோ இல்லாமல் வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்படும் போது வெளியேற்றம் நின்றுவிடும் என்றும் கூறுகிறார்.
அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி