நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் - ஏற்படவுள்ள பேராபத்து
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்
நாட்டைவிட்டு வைத்தியர்கள் வெளியேறி செல்வது அதிகரித்துள்ளமையானது சுகாதாரதுறையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துமென கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வைத்தியர்கள் வெளியேறுவதால் சில வைத்தியசாலைகள் மூடப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலைமை திஸ்ஸமஹாராம போன்ற வைத்தியசாலையில் ஏற்பட்டால் நோயாளர்கள் கராப்பிட்டிய போன்ற வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நோயாளர்களுக்கு அசௌகரியமான நிலையே காணப்படுவதாகவும் அந்த சங்கம் தரிவித்துள்ளது.
அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்
மிகக் குறைந்த வசதிகளின் கீழ் சுகாதார சேவைகளை வழங்கும் இந்த மருத்துவர்களை இத்துறையில் தக்கவைக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் அதற்காக அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
