ஞானசாரதேரரின் விடுதலை : சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(galagoda aththe gnanasara),முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்காக மேற்கொண்ட தீர்மானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்தபோதே இந்த விடுதலைக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மன்னிப்பை ரத்து செய்ய கோரி, சந்தியா எக்னெலிகொடமனுதாக்கல்
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரி, சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் ரஜித் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்த மனு, எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க, மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றின் உத்தரவு
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை அடுத்து, முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், இந்த மனுவை 2025 ஓகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
