பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் குழுவினரை வரவேற்ற டொல்பின்கள் (வைரலாகும் காணொளி)
சுனிதா வில்லியம்ஸ்(sunita williams), புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் புளோரிடா அருகே கடற்கரையில் விழுந்த போது, சுற்றி சுற்றி ஏராளமான டொல்பின்கள் வந்த காட்சி வைரலாகி வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பயணித்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இலங்கை நேரப்படி இன்று(19) அதிகாலை 3:27 மணிக்கு, புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
பந்துபோல் மிதந்து வந்த விண்கலம்
கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விண்கலத்தை வரவேற்ற டொல்பின்கள்
டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டொல்பின்கள் வேகமாகச் சென்று மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தன. இந்த காட்சிகள் நாசா ஒளிபரப்பிய நேரடி காணொளியில் பதிவாகி இருந்தன.
இந்த காணொளியை நாசா சமூக வலைதளத்தில் பகிர்ந்து திட்டமிடப்படாத வரவேற்பு குழுவினர் என பதிவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்