போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்..! ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம்

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan Peoples
By Kiruththikan Oct 14, 2022 07:57 AM GMT
Report

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பிரபாகரனைப் போன்றவர்கள் எனக் குறிப்பிட்டு , அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். 

உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்..! ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம் | Dont Be Portrayed As Terrorists Ranil

உள்ளுராட்சி தேர்தல் ஏற்கனவே ஓராண்டுக்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் அதனை நீடிப்பதற்காகவே உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலைக் காலம் தாழ்த்துதல் என்ற கசப்பான மருந்தை இனிப்பாக வழங்குவதற்காகவே உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகக் கூறுகின்றனர்.

தற்போதுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையோ அல்லது உள்ளுராட்சி உறுப்பினரையோ மக்கள் ஏற்க தயாராக இல்லை.

எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் , அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

இது இவ்வாறிருக்க மறுபுறம் வரிகளை அதிகரித்து மக்கள் மீது பாரிய சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.

தனவந்தரான தம்மிக பெரேராவிற்கும் , சாதாரண மக்களும் ஒரே அளவில் வரிகளை அறவிடுகின்றனர்.

அரச உத்தியோகத்தர்கள் கூட இந்த வரி அறவீட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி வீதங்கள்

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்..! ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம் | Dont Be Portrayed As Terrorists Ranil

வரிகள் ஒருபுறமிருக்க மறுபுறம் வட்டி வீதங்களையும் அதிகரித்துச் செல்கின்றனர்.

ஏற்கனவே வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தவிர சமூக பாதுகாப்பு வரி 1.5 வீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் , மறுபுறம் நிலக்கரி இறக்குமதி போன்றவற்றில் மோசடி செய்து கொண்டிருக்கிறது.

அதே வேளை இதற்கு முன்னர் இடம்பெற்ற எந்தவொரு மோசடிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.

ஆர்ப்பாட்டத்திற்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோரை பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றனர் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

உரிமைகளுக்காக போராடும் மக்கள்

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்..! ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம் | Dont Be Portrayed As Terrorists Ranil

தமது ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று அதிபரை கேட்டுக் கொள்கின்றோம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது பொதுஜன பெரமுன ஆட்டி வைக்கும் பொம்மையாகவே உள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017