சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை! சஜித்தின் நிலைப்பாட்டுக்கு விஜயபால வழங்கிய பதில்
கொழும்பில் இடம்பெற்ற சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை தொடர்பில் பல முக்கிய விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சி தலைவர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி
“கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் எந்த விதமான கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றோம். விசாரணைகளில் சில முக்கிய விடயங்கள் தெரிய வந்துள்ளன.
இதனால் அவை தொடர்பிலும், குற்றவாளிகள் தொடர்பில் வெளிப்படையாக கூற முடியாது.
எவ்விதத்திலும் இவை தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை செலுத்தாது.
பாதாள உலக குழு
குறிப்பாக எமது அரசாங்கத்தால் பாதாள உலக குழுவை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பதுங்கி இருந்த 23 பாதாள உலக குழு நபர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கும், புலனாய்வாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியமாகிறது. அதனை பரிசீலித்து வழங்க உள்ளோம்.
ஆனால் தொழில் துறை சாராத விடயங்களை முன்னெடுத்தால் அவர்கள் மீது விசாரணை இடம்பெறும்.
கடந்த 45 நாட்களில் 9 பேர் துப்பாக்கிச்சூடுகளில் பலியாகியுள்ளனர். மேலும் அதற்கு முந்தைய 45 நாட்களில் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இவ்வாறான உயிரிபலிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ” என கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |