கிண்ணியா கடற்றொழிலாளர்களுடனான அமைச்சர் டக்ளஸின் சந்திப்பு
கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்திப்பானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் அழைப்பின் பேரில் இடம் பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்று (02) அமைச்சர் கிண்ணியா பிரதேசத்துக்கு சென்று கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
கலந்து கொண்டோர்
இச் சந்திப்பில் திருகோணமலை கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் இஷார தரிந்து கண்காணம்கே, சுருக்கு வலை சங்க தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சேருவில தொகுதி அமைப்பாளருமான சரத் லோரன்ஸ், முன்னாள் நகர சபை உறுப்பினர் கலிபதுள்ளாஹ், கிண்ணியா மீனவ மகா சங்க தலைவர் ரிஜால் பாயிஸ், பைரூஸ், ஆரிஸ் உள்ளிட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
21 மணி நேரம் முன்