மட்டக்களப்பில் சிக்கிய போதைப்பொருள் வியாபாரிகள்
மட்டக்களப்பு காவல் நிலைய பிரிவுகளில் காத்தான்குடி, ஏறாவூர், பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகளை நேற்று வெள்ளிக்கிழமை(10) இரவு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் வியாபாரத்துக்கு என போதைப் பொருளை எடுத்துச் சென்ற 33 வயதுடைய ஒருவரை 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி கைது
அதேவேளை மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து ஏறாவூர் பிரதேசத்தில் 15 கிராம் 660 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.
விகாரையில் இருந்து போதைப்பொருள் வியாபாரம்
மட்டக்களப்பு மங்களராம விகாரையில் தங்கியிருந்து கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவையைச் சேர்ந்த 29 வயது இளைஞன் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கடந்த 4 வருடங்களாக விகாரையில் தங்கியிருந்து வீடுகளில் சரிந்து வளர்ந்து வரும் தென்னை மரங்களை இரும்பு கம்பி கேபிள் இழுத்து கட்டி வரும் நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் எல்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை 170 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வியாபாரிகளை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
