வெளிநாட்டிலிருந்து கடல் வழியாக கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் சிக்கின
சிறிலங்கா கடற்படையினர், கல்பிட்டியின் கிம்புல்பொக்க குளம் பகுதியில் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு கண்ணாடி இழைப்படகுடன் கைது செய்தனர்.
அதன்படி, 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் சிறிலங்கா கடற்படை கப்பல் விஜயாவின் உச்சமுனை கடற்படைப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டியின் கிம்புல்பொக்க குளம் பகுதியில் ஒரு சந்தேகத்திற்கிடமான கண்ணாடி இழைப்படகு கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
150 பறவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
அந்த நேரத்தில், அந்த கண்ணாடி இழைப்படகினால் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 39 வயதுடைய கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைப்பு
சந்தேக நபர்கள், கண்ணாடி இழைப்படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
images - sri lanka navy
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
