இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி
அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாக ஈரான் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், விமான நிலையம் மற்றும் முக்கியப் பாலம் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பண்டர் இ ஹமீர் பாலத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பதிலடி
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை வடக்கு ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா நகரில் நான்கு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ருடாவ் என்ற குர்திஷ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள அல்-தான்ஃப் இராணுவத் தளத்தில் அமைந்திருந்த அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஷாஹரில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |