தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்தார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் இணைப்பு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.
ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டு
தங்கள் பிரதிநிதிகளான மக்களுக்கு சிங்களம் பேசும் கட்சிகளிடமிருந்து எந்த நிவாரணமும் கிடைக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் திருப்தி அடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார். அதற்குக் காரணம், அந்த மக்களின் நிலங்கள் இராணுவத்தால் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் நிலங்களில் பயிர் செய்து வருமானம் ஈட்டும் இராணுவம்
சில நிலங்களில் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இராணுவம் வருமானம் ஈட்டி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தகைய உண்மைகளின் காரணமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கங்களின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதாகவும், சம உரிமைகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |