வாகனங்களின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
வாகன இறக்குமதி மீதான கூடுதல் வரி வீதத்தை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நீக்க முடிவு செய்தால், உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலைகள் குறையக்கூடும் என்று இலங்கை வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு பின்னரும் அரசாங்கம் தற்போதைய வரி வீதத்தை அப்படியே தொடர்ந்தால், வாகன விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பெரும் தேவை காணப்பட்ட போதிலும், தற்போது அந்தத் தேவை சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
வாகன இறக்குமதி தரவுகள்
தற்போதைய வாகன இறக்குமதி தரவுகளை கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்றும், துல்லியமான ஒப்பீட்டிற்கு வாகன இறக்குமதி சாதாரணமாக இருந்த 2019 ஆம் ஆண்டின் தரவுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் மானேஜ் வலியுறுத்தியுள்ளார்.
சுங்க அறிக்கைகளின்படி, வாகனங்களை விடுவிப்பதற்காக ஒரு நாளைக்கு சமர்ப்பிக்கப்படும் சுங்க அறிவிப்புகளின் எண்ணிக்கை, முன்பு 800-850 ஆக இருந்த நிலையில், தற்போது 300-350 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
வாகன இறக்குமதிக்கான செலவு
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1070 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் காரணமாக வாகன இறக்குமதிக்கான செலவு சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |