அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! பாப் அல்-மண்டேப் நீரிணையை மூட முயற்சிக்கும் ஈரான்
ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான், செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை மூட முயற்சிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது சகாக்களான யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை இதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள், செங்கடல் வழியாக ஆசியப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
ஈரான் மேற்கொள்ளும் முயற்சி
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக, அமெரிக்காவும் ஈரானும் தற்போது கடுமையான தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்கா நேற்று (15) தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு அருகே விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை மீறி, ஈரானிய துறைமுகம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சுட்டு வீழ்த்தி நிறுத்தியது.
அத்தோடு ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளையும் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இதற்கிடையில், குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் செம்னான் விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் இலக்குகளை அமெரிக்கா தாக்கியதாக ஈரான் சுமத்தியுள்ளது.
இந்தச் சூழலில், ஈரான் ஒரு தீர்வை எட்டுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |