பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பைத் தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
அத்துடன் அந்தத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.
வெளியேறிய சிறீதரன்
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழல் நிலவிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில தரப்பினருக்கிடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நிலைமை மேலும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அர்ச்சுனாவை வெளியேற்ற வேண்டும்
அவர்களைத் தொடர்ந்து பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கூட்டத்திலிருந்து வெளியேறியதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட குழப்பத்தால் அங்கிருந்த பிரதிநிதிகள் அனைவரும் அர்ச்சுனாவை வெளியேற்ற வேண்டும் என கோசங்களை எழுப்பிய நிலையில் கடற்றொழில் அமைச்சர் அர்ச்சுனாவை வெளியேறுமாரு கோரினார்
அர்ச்சுனாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு நிலவிய காவல்துறை பாதுகாப்போடு கூட்டத்தின் இறுதியில் அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






