சர்ச்சைக்குறிய கருணைக்கொலை சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றில் அனுமதி
பிரான்ஸ் குடிமக்கள் தேவையேற்படின் உயிரை மாய்த்துக்கொள்ள(கருணைக்கொலை)சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கும் சட்டமூலம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு 291 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 241 பேர் எதிராகவும் வாக்களித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முறையான கோரிக்கை
மேலும், இந்த சட்டமூலம் இறுதியாகச் சட்டமாவதற்கு முன்பு, அதன் விதிகள் பிரான்ஸ் அரசியலமைப்பிற்கு இணக்கமாக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக அரசியலமைப்பு மன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டால் முன்னர் பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, புதிய சட்டமூலத்தின்படி, பிரான்ஸில் குணப்படுத்த முடியாத நோயின் இறுதிக் கட்டத்தில் உள்ள முதிய நோயாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் நபர், சிகிச்சையால் தணிக்க முடியாத கடுமையான உடல் அல்லது மன வேதனையால் அவதிப்படும் நோயாளியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான முறையான கோரிக்கை மருத்துவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் அந்தக் கோரிக்கையின் மீது 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |