ஆளுநர்களின் பதவி விலகல் - பிரதமரும் விலகுவாரா...! சீலரத்ன தேரர் கேள்வி
மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், தற்போதைய பிரதமரும் பதவி விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் தனது பதவி விலகியமைக்குச் சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்திப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி
மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது.
போதைப்பொருள்கள்
அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும்.
இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும்.

போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |