வடக்கைச் சீரழிக்கும் போதைப்பொருள் - விரைவில் முடிவுகட்ட ஆளுநர் நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் ஆறு விதமான போதைப்பொருட்களை பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும் தான் கடல் வழியாக வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாகவே வருகின்றன.
இதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம்
வழக்கில் பூதாகரமாக மாறியுள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர“ மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் நாம் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளோம். இது மிகவும் துக்கமான விடயம்.
இங்கு சில இளைஞர்கள் போதைப்பொருளை ஊசி மூலமும் உடலில் செலுத்துகின்றார்கள். தேசிக்காய் பானத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்துகின்றார்கள்.
நான் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு போதைப்பொருள் பிரச்சினையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களைக் கண்டேன்.
அவர்களுடன் பேசுகையில், யார் போதைப்பொருளை கொண்டு வருகிறார்கள்? யார் விற்பனை செய்கின்றார்கள் என்பது தொடர்பில் சில விடயங்களை அறிய முடிந்தது.
இதன் அடிப்படையில், இப்போது நாங்கள் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றோம்.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் கைதான பாவனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் விற்பனையை பணப்புழக்கம் காட்டிக் கொடுக்கின்றது. அதனூடாக பலர் சிக்குவார்கள்.
போதைப்பொருள் பிரச்சினை
எனவே இந்த நடவடிக்கையை நாம் கைவிடமாட்டோம். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு பின்னால் சென்று அவர்களை கைதுசெய்வோம்.
வடக்கில் போதைப்பொருள் பிரச்சினையை இலகுவாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை இங்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. போதைப்பொருள் பிரச்சினை முழு இலங்கையிலும் இருக்கின்றது” - என்றார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
