போதைப்பொருள் கடத்தலுடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு: வெளிப்படுத்திய மகிந்த அமரவீர!
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சனத் வீரசிங்க எனப்படுபவர் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர் ஒருவர் என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சனத் வீரசிங்க என்பவர் தற்போதைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்பு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தொடர்ந்தும் ஆளும் கட்சியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புகளை பேணி வருகின்றனர்.
கடந்த தினங்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்கள் சுங்கத்திவிருந்து விடுவிக்கப்பட்டமை மற்றும் நுவரெலியாவில் இயங்குவதாக கூறிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை தொடர்பிலும் அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிக்கப்படுவதற்கும், பாதாள உலகக் குழு ஒழிக்கப்படுவற்கும் எதிர்க்கட்சிகளாக எங்களுடைய ஆதரவை வழங்குவோம்.
எனினும், கட்சி பேதமின்றி அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |